ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. கொரோனா பாதிப்புகள் முடிவுக்கு வராமல் குறைந்து அதிகரிக்கிறது, அதிகரித்து பின்னர் குறைகிறது. அவ்வைரஸின் உருவத்தை போலவே இதுவும் ஒரு வட்ட வடிவ செயல்முறையாக தொடர்கிறது. பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இதுபோன்று போக்கு காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள். நாட்டிலேயே அதிக பாதிப்புகளை கண்ட மஹாராஷ்டிராவில் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பல மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் பிப்ரவரி 28 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு கணிசமாக ஏற்றம் கண்டது. இது…
Read More









