அணு ஆயுத ஒப்பந்தத்தில் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருங்கள். இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி பேசும்போது, ’’அமெரிக்கா அதன் அணுஆயுத ஒப்பந்ததங்களில் உறுதியாக இல்லாவிட்டால் அதற்கான கடுமையான விளைவுகளை சந்திக்கும்” என்று பேசியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும்…
Read More







